Tuesday, March 29, 2016

எகிப்து விமானத்தை கடத்தியது பயணி விமானி தகவல்

எகிப்து விமானத்தை கடத்தியது பயணி

விமானி தகவல்

எகிப்தில் பயணிகள் விமானத்தை, விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரே கடத்தியதாக விமானி கூறியுள்ளார்.
மேலும், அந்த பயணி, உடலுடன் வெடிகுண்டுகளை கட்டியிருப்பதாக மிரட்டல் விடுத்ததாகவும் விமானி கூறினார்.
எகிப்து நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும், அது சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியிருக்கலாம் எனவும், விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டின் லார்நக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட விமானத்தில் 80 பயணிகள் உள்ளனர்.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

No comments:

Post a Comment