Saturday, April 2, 2016

சாய்ந்தமருது அரசசேவை ஓய்வூதியர் சங்க பொதுக்கூட்டம் அதே நிருவாகசபையினர் தெரிவு : வைத்தியசேவையில் 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்த டாக்டர் ஜமீல் கௌரவிப்பு!

சாய்ந்தமருது அரசசேவை ஓய்வூதியர் சங்க பொதுக்கூட்டம்

அதே நிருவாகசபையினர் தெரிவு :

வைத்தியசேவையில் 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்த

டாக்டர் ஜமீல் கௌரவிப்பு!

(காரைதீவு  நிருபர்)

அரசசேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய சாய்ந்தமருது பிரதேச செயலகக்கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் நிதியத்தலைவர் எம்..அப்துல்ஜப்பார் தலைமையில் நடைபெற்றபோது கடந்தவருட அதே நிருவாகசபையினரே மீண்டும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இக்கூட்டம் நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.முஹமட் சலீம் கௌரவ அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் திருமதி எம்.எம்.உசைனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாவட்டத்தலைவர் கே.செல்லத்துரை செயலாளர் .எல.எம்.அமீன் ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர்.
பொன்னாடை போர்த்திக்கௌரவிப்பு!
இக்கூட்டத்தின் ஓரங்கமாக வைத்தியசேவையில் 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்த சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் குழுவின்; தலைவரும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்டத் தலைவரும் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான  டாக்டர் எம்..எம்.ஜமீல் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டார்..
சங்கத்தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார் மாலைசூட்ட பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பொன்னாடை போர்த்திக்கௌரவித்தார். டாக்டர் ஜமீல் தொடர்பான சுயசரிதம்  இங்கு பிரசுரமாக விநியோகிக்கப்பட்டது.
நிதியத்தின் செயலாளர் .எல்.மீராலெவ்வை நன்றியுரையாற்றினார்;.

அத்துடன் அவரது ஐம்பது வருட கால சேவைகள் குறித்து ஓய்வுபெற்ற பொறியியலாளர் அப்துல் அஜீஸ் சிறப்புரையாற்றினார்.










No comments:

Post a Comment