Saturday, April 30, 2016

புங்குடுதீவு தாயகம் அமைப்பின் நூலக திறப்புவிழா..! (படங்கள்)

புங்குடுதீவு தாயகம் அமைப்பின் நூலக திறப்புவிழா..!
(படங்கள்)
.
யாழ். புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம் அமைப்பின் தாயகம் என்ற பெயரிலான நூலகத் திறப்புவிழா நேற்று (30.04.2016) சனிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் திருமதி. .சுலோசனாம்பிகை (பிரதம போசகர், தாயகம் சமூக சேவையகம், புங்குடுதீவு) அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு. இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக வரவேற்று அழைத்து வரப்பட்டு தாயகம் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல், தாயகக் கொடியேற்றம் இடம்பெற்றதோடு அதனைத் தொடர்ந்து தாயகம் நூலகம் திறந்து வைக்கப்பட்டது,
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக திரு. எஸ்.கே. சண்முகலிங்கம், (தவிசாளர் வேலணை பிரதேச மத்தியஸ்த சபை மற்றும் தாயகம் சமூக சேவையகம் பிரதம ஆலோசகர்), செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு, (ஆலோசனை சபை உறுப்பினர், -தாயகம் சமூக சேவையகம்), திரு.அபிராஜ் வசந்தகுமார் (சுகாதார பரிசோதகர்), திரு. எஸ் சிவா (கிராம சேவகர்), செல்வி. .ஜனகா (கிராம சேவகர்), செல்வி. பவிஷானா, (தலைவர், -தாயகம் சமூக சேவையகம்), செல்வி காஞ்சனா (செயலாளர், தாயகம் சமூக சேவையகம்), திருமதி கேசவராஜா சசிகலா (சமூக நலன் விரும்பி) திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (இயக்குனர் "படைப்பாளிகள் உலகம்") சி. சாந்தகுமார் (நேசன் புடவையகம், புங்குடுதீவு,), திரு. கு.கைலைமலைநாதன் (புங்குடுதீவு நலன்விரும்பிசுவிஸ் லீஸ்), திரு.பொன் வைரமுத்து (முன்னாள் உதவிக் காணி ஆணையாளர் கிளிநொச்சி), திரு.செல்லத்துரை உதயகுமார் (சமூக நலன் விரும்பி லண்டன்), மற்றும் திரு மதீஷன், திரு.சாந்தகுமார், திரு.ஸ்ரீ உட்பட மேலும் சில வேலணை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகர்களும், மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நூலகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக சென்று புங்குடுதீவு "அம்பலவாணர் அரங்கில்" கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா போன்ற பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. (இதுகுறித்த முழுமையான வீடியோக்களும், படங்களும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்)











முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் 23வது வருட நினைவஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின்

23வது வருட நினைவஞ்சலி





 முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 23வது வருட நினைவஞ்சலி நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அவருடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் இந்த நினைவஞ்சலி தினத்தில் கலந்து கொண்டனர்.
, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினர்







அனுராதபுரம் துப்பாக்கி சூட்டில் பலியான மூவர் விபரம் !

அனுராதபுரம் துப்பாக்கி சூட்டில்
பலியான மூவர் விபரம் !


அனுராதபுரம் - திரப்பனை பகுதியில், நேற்று துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று பேர்களின் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில், ஒருவர் நொச்சியாகமை பிரதேசத்தினைச் சேர்ந்த சரத் பண்டார அல்லது எஸ். எப் பண்டார ஆவார்.
இரண்டாம் நபர், நொச்சியாகம பிரதேசத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய குமார என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட மூன்றாம் நபர், காலி - ஹிங்தொட பிரதேசத்தினை சேர்ந்த மகிந்த கமகே பிரதீப் குமார எனும் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள மூவரும் பயணித்த கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர் கிலிஒய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிடும் போதும் கார் இயங்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கார் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி காணப்பட்டதுடன், காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்து காணப்பட்டதாகவும், குறித்த கார் வடமத்திய மாகணத்தில் பதிவு செய்யப்பட்ட கார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், நேற்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் மூன்றும், அவ்விடத்தில் வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சி..கே 0692 என்ற இலக்கத் தகட்டைகொண்ட வாகனத்திலேயே இருந்துள்ளது






”தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள்” ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் செயலமர்வு

”தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் செயலமர்வு

மே மாதம் 3ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில்தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள்எனும் தலைபிலான துறைசார் செயலமர்வு எதிர்வரும் 3ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தை இலக்கம் 9 இல் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள் தொடர்பான செயற்பாடுகளை வழிநடாத்தும் துறைசார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அறிஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இச்செயலமர்வில் கலந்து கொள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதி சபை உறுப்பினர்களும் மற்றும் துறைசார் புத்திஜிவிகளும் ஆர்வமுள்ளவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் மே தினச் செய்தி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின்
மே தினச் செய்தி




இன்றைய தினம் சமூக மேம்பாட்டிற்காக் வியர்வை சிந்தி ஊழியத்தை அர்ப்பணித்து தங்களது பங்களிப்பை வழங்குகின்ற  வேலை செய்யும்  மக்களின் தினமாகும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மே தினச் செய்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்
மே தினச் செய்தி


உழைக்கும் தோழர்களின் வியர்வைக் கண்ணீரைப் போற்றும் நாளே மே தினமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும்,
வியர்வைக் கண்ணீரைப் போற்றிப் புகழும் நோக்கிலேயே உலகில் மே தினம் கொண்டாட்டப்படுகின்றது. உலக உழைக்கும் தோழர்கள் கையில் எடுத்துக் கொண்ட சிகப்பு கொடியின் ஊடாக உழைப்பாளர்களின் ஒற்றுமையும், வெற்றியுமே பதிவாகியுள்ளது. உழைக்கும் மக்களின் கண்ணீர் வியர்வை உதிரம் ஆகியவற்றின் அர்ப்பணிப்பு இந்த நாளில் நினைவு கூறப்படுகின்றது.
உலகின் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு அடியிலும் ஏதேனும் ஒர் வகையில் உழைப்பாளர்களின் பங்களிப்பு அதில் உள்ளடங்கியுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டுக்கு ஜனநாயக வெற்றி கிடைக்கப் பெற்றது.
புதிய பொருளாதாரம் அரசியல் என்ற வழிகளில் உழைப்பாளர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.
உழைக்கும் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படும் வெற்றிகரமான தினமாக இந்த மே தினம் அமையும் என வாழ்த்துகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 23 பேர் பலி

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 23 பேர் பலி

ராக் தலைநகர் பாக்தாதில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.
 பாக்தாதில் அமைந்துள்ள காதிமியான் வழிபாட்டுத் தலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ஷியா பிரிவினரைக் குறி வைத்து அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், திறந்த வெளிச் சந்தையில் இந்தக் கார் குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ராக் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 ஷியாக்களின் 7-ஆவது இமாம் மூஸா அஸ்-காதிமின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவகத்துக்கு ஆயிரக்கணக்கான ஷியா பிரிவினர் நடைபயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தச் சூழலில், இந்தக் கார் குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு? விசேட செயலமர்வு;

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

விசேட செயலமர்வு;



2015 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கைநூல் (University HANDBOOK) வெளியாகியுள்ள நிலையில் அவ் அனுமதிக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் மத்தியில் தமக்கு பொருத்தமான பாடநெறி அத்துடன் அதற்கு பொருத்தமான பல்கலைகழகம் என்பனவற்றை தெரிவு செய்வதில் பல்வேறு முரண்பாடுகள், குழப்பங்கள் மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது.
தற்போதுள்ள Z புள்ளி நடைமுறையில் தங்களது கல்வித்தகமைகேற்ப தாம் விரும்பிய பாட நெறியினையும் உரிய பல்கலைகழகத்தினையும் தெரிவு நடைமுறையில் விரிவான விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் எதிர்வரும் 08.05.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை சாஹிரா கல்லுரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் காலை 9.30 இற்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இக்கருத்தரங்கானது மாணவர்களின் பல்கலைகழக தெரிவு நடைமுறை தொடர்பில் நன்கு புலமை பெற்ற வளவாளரான சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் அவர்களால் விசேடமாக வடிவமைக்கபட்ட முறையில் நடாத்தபடஉள்ளது.
முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் 2015 இல் உயர்தர பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள் உட்பட சாய்ந்தமருது கல்முனை நிந்தவூர் சம்மாந்துறை அக்கரைப்பற்று அட்டாளச்சேனை பிரதேச மாணவர்களும் கலந்துகொள்ளலாம். அத்துடன் பெண் மாணவர்கள் தாங்கள் அல்லது தங்களது பெற்றோர்களை இந்நிகழ்வுக்கு அனுப்பிவைக்கமுடியும்.
தமக்கு பொருத்தமான பாடநெறி மற்றும் பல்ககலைகழக தெரிவில் சரியான நடைமுறை கடைப்பிடிக்காத போது பல்கலைக்கழக அனுமதியே இல்லாமல் போகிற நிலைமையும் சில சந்தர்பங்களில் மாணவர்கள் எதிர்நோக்கி இருகின்றனர்.
எனவே எமது ஸாஹிரா பழைய மாணவர் சங்கம் எடுத்திருக்கும் இந்த பயன்தரு முயற்சி வெற்றிபெற மாணவர்களதும், பெற்றோர்களாகிய உங்களது ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
கல்முனை ஸாஹிரா கல்லூரி
குறிப்பு: உரிய நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பிக்க உள்ளதால் தங்களது வருகையினை அன்றையதினம் முற்பகல் 9.15 இற்கு முன்னர் உறுதிப்படுத்துமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
செயலாளர்
0771094058

ஜனாதிபதி பங்குபற்றும் விசேட ஊடக கலந்துரையாடல் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இன்று இரவு 9 மணிக்கு

ஜனாதிபதி பங்குபற்றும் விசேட ஊடக கலந்துரையாடல்
தொலைக்காட்சி அலைவரிசைகளில் இன்று இரவு 9 மணிக்கு


ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பங்குபற்றும் விசேட ஊடக கலந்துரையாடல் இன்று இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஔிப்பரப்பாகும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவின்போது..

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
20 ஆவது ஆண்டு நிறைவு விழாவின்போது..


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவின்போது..