Sunday, April 3, 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளராக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் ஹாஜியார் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

சாய்ந்தமருதுக்கான அமைப்பாளராக

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்

 அன்வர் ஹாஜியார் நியமனம்!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.அன்வர் ஹாஜியார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் இந்நியமனத்தை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீன் செய்துள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமீர் அலி அறிவித்தார்.
கடந்த ஒரு மாத காலமாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி .எம்.ஜெமீல், சாய்ந்தமருதில் மேற்கொண்ட கட்சியின் கிராம மட்ட கிளைகளை அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து நேற்று 2016-04-02ஆம் திகதி இரவு இடம்பெற்ற சாய்ந்தமருது மத்திய குழுவை ஸ்தாபிக்கும் நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீனினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் .எல்.எம்.அன்வர் ஹாஜியார் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமீர் அலி அறிவித்தார்.
.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்- கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ருப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













No comments:

Post a Comment