Friday, April 29, 2016

கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் நினைவுப் பேருரை! சுவடி ஆற்றுப்படை ஐந்தாம் பாகம் நூல் வெளியீடு!!

கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் நினைவுப் பேருரை!
சுவடி ஆற்றுப்படை ஐந்தாம் பாகம் நூல் வெளியீடு!!


மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் நினைவுப் பேருரையும் அவர் தொகுத்து வைத்திருந்த சுவடி ஆற்றுப்படை ஐந்தாம் பாகம் நூல் வெளியீடும் நாளை 30 ஆம் திகதி சனிக்கிழமை பி. 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பேராசிரியர். எம்.எஸ்.எம். அனஸ் தலைமை தாங்கும் இந்நிகழ்வில்
இளம் வளர்ந்தோர் இலக்கியம் என்ற தலைப்பில் பேராசிரியர். சபா ஜெயராஜா நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.
வரவேற்புரையை . பீர்மும்மது  நிகழ்த்துவார்.
நூல் அறிமுக உரையை வைத்தியக் கலாநிதி தாஸிம் மது நிகழ்த்துவார்.
கலைவாதி கலீல் இரங்கற்பாப்பொழிவு செய்வார். காத்தான்குடி பௌஸ் மௌலவியின் துஆப் பிரார்த்தனையுடன் நிறைவு பெறவுள்ள இந்நிகழ்வில் நஸீல் ஜெமீல் நன்றியுரை வழங்குவார்.
 44A, ஆசிரி மாவத்தை, களுபோவிலை, தெகிவளையிலுள்ள இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணிப்பகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

No comments:

Post a Comment