Tuesday, May 3, 2016

நாடாளுமன்றத்தில் மோதல்! கேகாலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில்!

நாடாளுமன்றத்தில்  மோதல்!

கேகாலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்

சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில்!





நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பம் கைகலப்பு காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில்.அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிரணியின் சில உறுப்பினர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை நிலத்தில் தள்ளி வீழ்த்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் இவ்வாறு  முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அடிதடியானது, ஆளும் கட்சியினருக்கும் மஹிந்த ஆதரவணியினருக்கும் இடையிலேயே  இடம் பெற்றுள்ளது.
இதனடிப்படையில், பாராளுமன்றை சபாநாயகர் சற்று நேரம் ஒத்திவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment