Tuesday, May 3, 2016

70-77 வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய ஜனாதிபதி

70-77 வரையான காலப்பகுதியில்
ஊடகவியலாளராகக் கடமையாற்றிய ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஊடகவியலாளர் என்று தெரிவித்துள்ளார். தான் பத்திரிகை துறையோடு இணைந்து கடமையாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடக தினமான இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியாக உள்ளமை இந்த நாட்டில் தான் என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 70-77 வரையான காலப்பகுதியில் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியாக உள்ளதை நினைத்து இந்த நாட்டின்ஊடகவியலாளர் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment