Wednesday, June 1, 2016

ஒரே மின் உயர்த்தியில் இரு துருவங்களான பொன்சேகா மற்றும் நாமல்

ஒரே மின் உயர்த்தியில்
இரு துருவங்களான பொன்சேகா மற்றும் நாமல்


அண்மையில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ  இருவரும் ஒரே மின் உயர்த்தியில் பயணித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் வீடமைப்பு திட்டம் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்தப் பின்னர் காலை இடைவேளையை எடுத்து கொள்ள கீழே செல்வதற்காக கயந்த கருணாதிலக்க மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் நின்று கொண்டிருந்த வேளையில் அவர்களுடன் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இணைந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூவரும் மின் உயர்த்தியில் பயணித்து கொண்டிருந்த போது நாமல் ராஜபக்ஸ , சரத் பொன்சேகா ஆகியோரை தனியாக விட்டு விட்டு திடீர் என கயந்த கருணாதிலக்க அடுத்த மாடிக்கு சென்றுள்ளார்.

மதிய உணவு வேளையில் நாமல், கயந்தவை சந்தித்து ஏன் திடீரென மின் உயர்த்தியை விட்டு சென்றீர்கள் என்று கேட்டுள்ளார் ஆனால் இதற்கான பதிலை கயந்த கடைசி வரையிலும் தெரிவிக்கவில்லையாம்.

No comments:

Post a Comment