Saturday, July 2, 2016

பாக்தாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 12 பேர் பலி 27 பேர் படுகாயம்



பாக்தாத்தில் இரட்டை குண்டு வெடிப்பு:

12 பேர் பலி 27 பேர் படுகாயம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முதல் தாக்குதல் அதிகாலை 1 மணிக்கும், மற்றொரு தாக்குதல் சிறிது நேரத்திற்கு பிறகும் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் தான் ஓட்டி வந்த காரை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல கடைகள் மற்றும் கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.


No comments:

Post a Comment