Saturday, July 2, 2016

அமெரிக்காவில் 4 குழந்தைகள் குத்திக் கொலை: தாய் கைது

அமெரிக்காவில் 4 குழந்தைகள் குத்திக் கொலை: தாய் கைது

அமெரிக்காவில் தனது 4 குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
டென்னெஸீ மாகாணம், மெம்ஃபிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் (உள்ளூர் நேரம்) பொலிஸாருக்குத்  தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்று நான்கு குழந்தைகளின் உடல்களை மீட்டனர்.

மேலும் அந்தக் குழந்தைகளின் தாயை கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். எனினும், குழந்தைகளைக் கொன்றதாக அந்தப் பெண் மீது பொலிஸார் குற்றச்சாட்டு பதிவு செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.







No comments:

Post a Comment