Monday, August 1, 2016

முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம் கட்சியின் தலைவர் முதலாவது மரத்தை நட்டார்

முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம்
கட்சியின் தலைவர் முதலாவது மரத்தை நட்டார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம்" செயல் திட்டத்தை, கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்டம், கந்தளாய், பேராறு, முதலாம் கொலனியில் ஆரம்பித்து வைத்தார்.
கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ரசூல் ஜே. பியின் வீட்டு வளவில் கட்சியின் தலைவர் முதலாவது மரத்தை நட்டார்.

இந்தச் செயல் திட்டம், கந்தளாயைச் சேர்ந்த சாஹித்தீன் அதிபரின் எண்ணக் கருவில் உருவானதால் இதனை அங்கேயே தொடங்கி வைப்பதாக தலைவர் தீர்மானித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.




No comments:

Post a Comment