Monday, August 1, 2016

முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம் கல்முனையில் ரஹ்மத் மன்சூர் ஏற்பாட்டில் ஆரம்பம்

முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம்
கல்முனையில் ரஹ்மத் மன்சூர் ஏற்பாட்டில் ஆரம்பம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வழிகாட்டலில் இன்று நாடு பூராகவும் இடம்பெற்ற வீட்டுக்கு வீடு மரம் என்ற வேலைத்திட்டம் கல்முனையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு ரஹ்மத் மன்சூர் குழுவினரால் மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறியது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் வழிகாட்டலில் வீட்டுக்கு வீடு மரம் எனும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றது.
இதன் ஒரு பகுதியாக கல்முனை மாநகரப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இம்மரம் நடுகை நிகழ்வில் கட்சியின் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தனர். மரம் நடுகை வேலைத்திட்டம் இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.











No comments:

Post a Comment