Tuesday, August 2, 2016

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு


கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் விளக்கமறியல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பியசேன கடந்த வாரம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆட்சியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கடந்த வாரம் கைப்பற்றப்பட்டிருந்தது.
அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது.


No comments:

Post a Comment