Monday, August 29, 2016

நல்லுள்ளங்களுக்கு நன்றி நவில்கின்றார் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர்

நல்லுள்ளங்களுக்கு நன்றி நவில்கின்றார்
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர்



சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் அல்லாஹ்வின் உதவியால் சுகமடைந்து தற்போது கொழும்பு வீட்டில் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
இவர் சுகயீனமுற்றிருந்த்தை அறிந்து கொண்ட நல்லுள்ளங்கள்  தததம் முகநூலில் இவரின் சுகத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து பதிவேற்றம் செய்திருந்ததோடு மாத்திரமல்லாமல்  அதில் கரிசனையோடும் இருந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நல்லுள்ளங்களுக்கு முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் .ஆர்.மன்சூர் மற்றும் அவர்களின் பாரியார் ஜனாபா ஸொஹறா மன்சூர் மகள் சட்டத்தரணி மர்யம் நளிமுதீன் உட்பட குடும்பத்தினர்கள் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment