Tuesday, January 31, 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டம் திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்களித்த மக்களின் விருப்பம்


தகவல் அறியும் உரிமைச் சட்டம்

திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்களித்த மக்களின் விருப்பம்


அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
இது இலங்கையில் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது. இதற்கான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த 2017.01.20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.
இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்களித்த மக்கள் அவர்கள் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகளிடம்  தகவல் ஒன்றை அறிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.

திகாமடுல்ல மாவட்டத்தில் பிரதி அமைச்சர்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் இணைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களின் கல்வித்தகைமைகளை அறிந்து கொள்ள விரும்புகின்றார்கள். தெரியப்படுத்துவார்களா?

சிறுமிக்கு அபூர்வ தோல் நோய்


சிறுமிக்கு அபூர்வ தோல் நோய்

வங்காளதேச சிறுமிக்கு முகத்தில் மரம் போன்று தசைகள் வளரும் அபூர்வ தோல் நோய் பாதிப்பு உள்ளது.
வங்காளதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சஹானா காதுன். இவள் ஒருவித அபூர்வ தோல் நோயினால் அவதிப்படுகிறாள். இவளது முகம், காது, நாடி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்துள்ளது. இவள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.
இவளது தந்தை முகமது ஷாஜகான் கூலி வேலை பார்க்கிறார். இந்த நோய்க்கு டாக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சஹானா சிகிச்சை பெற்று வருகிறாள்.
அவளுக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். இது ஒரு அபூர்வ நோய் என்றும், உலக அளவில் 6 பேர் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி சஹானாவின் தந்தை முகமது ஷாஜகான் கூறும்போது, “நாங்கள் மிகவும் ஏழைகள். எனது மகள் 6 வயதில் தனது தாயை இழந்தாள். உடலில் வளரும் மரம் போன்ற தசையை அகற்றி எனது மகளின் அழகிய முகத்தை டாக்டர்கள் மீண்டும் திருப்பி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் விமானத்தில் பயணம்


சவூதி அரேபிய இளவரசரின்

80 பருந்துகள் விமானத்தில் பயணம்

சவூதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோரெட்டிட்இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பயணிகள் விமானத்தில் ஆட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பறவைகள், விலங்குகள் பயணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் சவூதி அரேபியா இளவரசர் ஒருவரின் 80 பருந்துகள் விமானத்தில் ஆட்களுடன் பயணம் செய்தன.
பருந்து ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. எனவே அது அங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் மூலம் அவை பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, பாகிஸ்தான், மொராக்கோ மற்றும் சிரியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
அந்த வகையில் சவூதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்தன. அவற்றின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அவை இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்தன.
பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோரெட்டிட்இணைய தளத்தில் பிரசுரமாகி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை தனது விமானி நண்பர் வழங்கியதாக அதை வெளியிட்டவர் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன்!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால்

பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன்!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐந்து 5 வயது சிறுவன் டலாஸ் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையானது சர்வதேச மட்டத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்து மற்றும் ஈரான் நாடுகளுடன் தொடர்புடைய குடும்பத்தின் சிறுவன், தனது பெற்றோருடன் ஈரானில் இருந்து அமெரிக்க விமானத்தில் வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அங்கு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்த சிறுவனை மீண்டும் தங்களிடம் வழங்குமாறு பெற்றோர் அழுது புலம்பும் புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் 4 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனது பிறந்த நாளில் அந்த சிறுவன் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அகதிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவே இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்த வெள்ளை மாளிகை பேச்சாளர், குறித்த விமான நிலைய பாதுகாப்பாளர்களின் செயற்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என்றால் அவரது வயது, பால் குறித்து சிந்திப்பது முக்கியமான விடயம் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



தாருஸ்ஸலாமில் (சாந்தி இல்லம்) இடம்பெற்ற அல்குர்ஆன் விளக்கவுரையின்போது


தாருஸ்ஸலாமில் (சாந்தி இல்லம்) இடம்பெற்ற

அல்குர்ஆன் விளக்கவுரையின்போது


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அஷ்ஷெய்க் அரபாத் நளீமி அவர்களினால் நேற்று31 ஆம் திகதி செவ்வாய்கிழமை  மாலை நடத்தப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரையின்போது......






பல இன மக்களினதும் ஐக்கியத்திற்காக தலைநகரில் நிமிர்ந்து நிற்கின்ற (தாறுஸ்ஸலாம்) சாந்தி இல்லம் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்


பல இன மக்களினதும் ஐக்கியத்திற்காக

தலைநகரில் நிமிர்ந்து நிற்கின்ற

(தாறுஸ்ஸலாம்) சாந்தி இல்லம்

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்



பல இன மக்களினதும் ஐக்கியத்திற்காக தலைநகரில் நிமிர்ந்து நிற்கின்ற (தாறுஸ்ஸலாம்) சாந்தி இல்லம் பல இன மக்களினதும் உழைப்பைக் கொண்டும், பண உதவிகளைக் கொண்டும் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த இல்லத்தை நிர்மாணிப்பதற்கு என ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரம்சிங்க, சிவசிதம்பரம் ஐயா, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் பண உதவி செய்திருக்கிறார்கள். ஏன் ஜப்பான் நாடு கூட பண உதவிகளைச் செய்திருக்கின்றது.இப்படிச் சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கின்றது.
இவ்வாறு துறைமுகங்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்றலில் 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 அம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
கல்முனை நீர் வழங்கல் திட்டம், சாய்ந்தமருது சிறுவர் பூங்கா என்பனவற்றை ஆரம்பித்து வைத்தும் சாய்ந்தமருது பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுதல், சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடுதல் ஆகிய வைபவங்களில் அமைச்சர் கலந்துவிட்டு இறுதியில் இப்பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் அல்ஹாஜ் எம்..எம்.மீராலெவ்வை தலைமை வகித்த இப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அஷ்ரஃபின் நீண்ட உரை அதிகாலை 2.00 மணி வரை நீடித்தது.
அமைச்சர் அஷ்ரஃப் இக்கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:-
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு கண்ணாடியாக இருக்க வேண்டும்.என இஸ்லாம் மார்க்கம் கூறுகின்றது. அதேபோல்தான் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்கு உறுதுணையாக இருந்தும் உதவ வேண்டும். எமது பார்வையும் எண்ணங்களும், சிந்தனைகளும் எப்போதும் பரந்து விரிந்து விசாலமானதாகவும் இருக்க வேண்டும்.நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்கின்ற உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப நாமும் நமது சிந்தனைகளும் எண்ணங்களும் மாறியே ஆகவேண்டும்.
எமது நாட்டில் பல பாகங்களிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பல பள்ளிவாசல்கள் தமிழ், சிங்கள சகோதரர்களின் உழைப்பின் உறுதுணையுடனேயே உருவாக்கப்பட்டு வருகின்றது என்பத நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம்அல்லாஹு அக்பர்என்று பாங்கு சொல்லி தொழுகைக்காக அழைக்கின்ற பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதற்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் தேர்ச்சியானவர்கள் இல்லை. நாம் அல்லாஹு அக்பர் என்று சொல்லி தொழுவதற்கு இந்து சகோதரர்களின் உதவிதான் தேவைப்படுகின்றது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு இனம் மற்றொரு இனத்தின் உதவியை நாடவேண்டிய நிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவேதான் எமது நாட்டில் மூவின மக்களினதும் இன ஐக்கியம் உறுதிப்பட்டேயாக வேண்டும்.
ஒரு சமூகம் தமது நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றபோது மற்ற சமூகத்தின் விடிவுக்காகவும் பிரார்த்தனை புரிய வேண்டும். ஒரு சமூகத்தின் சந்தோசம் மற்ற சமூகத்தின் சந்தோசத்தைக் குறைத்து விடக்கூடாது.
கல்வியில் எமது சமூகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் மேலும் உயர வேண்டும் எனின் ஏனைய சமூகங்களின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் தேவையாகும்.
நாம் ஏனைய சமூகத்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினால் எமது விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம் என சிலர் நினைக்கிறார்கள் இது அவர்களது அறியாமையின் வெளிப்பாடாகும்.
தனிமனித போராட்டமல்ல
முஸ்லிம் காங்கிரஸின் போராட்டம் ஒரு தனி மனிதனின் போராட்டம் என நினைத்துவிடக்கூடாது. இது ஒரு சமூகத்தின் விடுதலைக்காக தோற்றுவிக்கப்பட்ட போராட்டமாகும்.
அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுகின்ற சமூகத்தின் விடுதலையை வேண்டி நிற்கின்ற போராட்டமாகும். பாராளுமன்ற ஆசனங்களுக்காகவோ அமைச்சர் பதவிகளுக்காகவோ இக்கட்சி உருவாக்கப்பட்டதல்ல.
வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களது வரலாற்றை எழுதுகின்றபோது அந்த வரலாற்றில் முதலில் எழுதப்பட வேண்டியது எனது பெயராகும். இவ்வாறான பல தியாகங்களுக்கு மத்தியில் இக்கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக உருவாக்கப்பட்ட எமது உழைப்புக்கு பாராளுமன்றக் கதிரையைக் கொண்டு விலை பேசாதீர்கள்.
தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற பலருக்கு தமிழில் ஒரு வார்த்தைகூட எழுதவோ வாசிக்கவோ தெரியாது. திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 ஆயிரம் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தில் இருந்து கொண்டிருக்கும் 3 சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 30 தமிழ் சொற்கள் கூட தெரியாது. இப்படிப்பட்டவர்களால் இன ஐக்கியம் பற்றி எப்படி பேச முடியும்? இன ஐக்கியம் என்பது உள்ளத்தில் இருந்து உருவாக வேண்டும்.
இக்கூட்டத்தில் தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எம்.முஸ்தபா, லத்தீப் சின்னலெவ்வை, றிஸ்வி சின்னலெவ்வை, கல்முனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்..மஜீட், சமய, கலாசார அமைச்சின் முஸ்லிம் திணைக்கள ஆலோசகர் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகியோரும் பேசினார்கள்.
-நன்றி வீரகேசரி 1998.11.26

இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் இ அஹமது மாரடைப்பால் மரணம்


இந்திய முன்னாள் மத்திய அமைச்சர்

இ அஹமது மாரடைப்பால் மரணம்

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் இ அஹமது (வயது 78) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 நேற்று நடந்த இந்திய நாடாளுமன்றக் கூட்டத்  தொடரின் போது இருஅவைகளும் கூடியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இரு அவைகளுக்கும் பொதுவாக பிரணாப் முகர்ஜி  உரையாற்றிய போது, மதுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலைமணியளவில் உயிரிழந்தார் என அறிவிக்கப்படுகின்றது.

கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதியில் சார்பில் வெளியுறவுத்துறை மத்திய  இணை அமைச்சராக மது பணியாற்றி வந்தார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் ஆவார்.


கனடிய மசூதி தாக்குதல் சந்தேக நபர் தீவிர டிரம்ப் ஆதரவாளராம்! வெளியான அதிர்ச்சி தகவல்


கனடிய மசூதி தாக்குதல் சந்தேக நபர்

தீவிர டிரம்ப் ஆதரவாளராம்!

வெளியான அதிர்ச்சி தகவல்

கனடிய மசூதி தாக்குதலை பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
இந்த கொடுமையான படுகொலையின் சந்தேக நபர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளன் எனவும் ஒரு பிரான்ஸ் தீவிர வலதுசாரி தலைவன் மற்றும் பிரிவினைவாத Parti Quebecois வை சேர்ந்தவனெனவும் அவனது முகநூல் கணக்கில் இருந்து தெரிய வந்துள்ளதாக அறியப்படுகின்றது.
கனடாவின் கியுபெக் நகர பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல் குறித்து கனடா மற்றும் உலகம் பூராகவும் உள்ள தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
27வயதுடைய Alexandre Bissonnette இவன் மீது ஆறு கொலை மற்றும் ஐந்து கொலை முயற்சி குற்றங்கள் சுமத்தப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
இரண்டாம் உலகபோர் படை வீரர் ஒருவரின் பேரனாவான். ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற சூட்டு சம்பவத்திற்கான உந்துதல் என்னவாக இருக்கும் என தாங்கள் நம்பும் தகவலை பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் பிரதமர் ட்ரூடோ இதனை ஒரு பயங்கரவாத செயல் என கண்டித்துள்ளார்.
Bissonnette யின் பெயரில் உள்ள முகநூல் சுயவிவரத்தில் இவன்பிடித்திருக்கின்றதுடிரம்ப், பிரான்ஸ் அரசியல்வாதி Marine Le Pen, separatist Parti Quebecois மற்றும் இஸ்ரேலிய ஆயுதப்படைகள் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தேசிய முன்னணியின் தலைவரான லி பென் வெள்ளை மேலாதிக்க வாதிகளிடமிருந்து பாராட்டுக்களை வென்ற முஸ்லீம்-விரோத மற்றும் குடியேற்றவிரோத சித்தாந்தம் கொண்டவர் என அறியப்படுபவர்.
மனிதன் ஒருவன் பள்ளிவாசலிற்குள் நுழைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் எச்சரிக்கை எதுவும் செய்யாமல் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பொலிஸாரின் சாட்சியங்களும் தெரிவித்துள்ளன.
மாலை நேர தொழுகை வேளையில் மரணகுவிப்பு, பீதி, காயங்கள் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டன. பிரார்த்தனையில் இருந்த ஆறுபேர்கள் கொல்லப்பட்டனர். 19பேர்கள் காயமடைந்துள்ளனர்-அனைவரும் ஆண்கள். வைத்தியசாலையில உள்ள ஐவரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொடூரமான சம்பவம் நாடு பூராகவும் மற்றும் உலகம் பூராகவுமே பிரார்த்தனை வழிபாடுகளையும், அனுதாப வெளிப்படுத்துதல்களையும் ஏற்படுத்த தூண்டியுள்ளது.