Saturday, April 1, 2017

கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை கழுத்து நிறைய மாலை அணிந்தவர்களாக பூரிப்பூடன் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு


கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை

கழுத்து நிறைய மாலை அணிந்தவர்களாக பூரிப்பூடன்

மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு

கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை விஸ்தரிக்கப்பட்டு, நேற்று 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
எமது மக்கள் பிரதிநிதிகள் கழுத்து நிறைய மாலை அணிந்தவர்களாக பூரிப்பூடன் வைத்தியசாலையை சம்பிரதாய்பூர்வமாகத் திறந்து வைப்பதையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளியை மாலை அணிந்தவர்களாகவே கவலையை மறந்து  அக மகிழ்ந்தவர்களாகப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான அப்துல் றஸாக், சிப்லி பாறுக், ஆரிப் சம்சுதீன், .எல்.எம். மாஹிர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment