Saturday, September 30, 2017

ஜேர்மனி, பின்லாந்து செல்லவிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க



ஜேர்மனி, பின்லாந்து செல்லவிருக்கும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஒன்பது நாட்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாடுகளில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.


பிரதமருடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும், ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திடீரென ஜப்பான் பறந்தார் மஹிந்த ராஜபக்ஸ தொண்டையில் அறுவைச் சிகிச்சை?


திடீரென ஜப்பான் பறந்தார் மஹிந்த ராஜபக்ஸ

தொண்டையில் அறுவைச் சிகிச்சை?

முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக் நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே மஹிந்த ராஜபக்ஸ ஜப்பான் சென்றுள்ளார். இதன்போது, அவருக்கு சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸ ஜப்பானுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
கடந்தமுறை ஜப்பான் சென்றிருந்த போது தொண்டை நோய் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இந்த தொண்டை நோய் சிறியதே என்றும், வரப் போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் பரப்புரை செய்வதற்கு தனது உடல்நிலை வலுவாக இருக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஸ கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கத்தி, அரிவாளோடு ஆயுத பூஜை கொண்டாடிய இந்து மகா சபா தலைவர்..!


கத்தி, அரிவாளோடு ஆயுத பூஜை கொண்டாடிய

இந்து மகா சபா தலைவர்..!

தமிழகத்திலுள்ள இந்து மகா சபை மாநிலத் தலைவர் .பாலசுப்பிரமணியன் இல்லத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில் கத்தி, வேல்கம்பு, அருவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பூஜை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆயுத பூஜை அன்று துப்பாக்கி அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்த போட்டோ ஃபேஸ்புக்கில் வைரலாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்து மகா சபா முகநூல் பக்கத்தில், .பாலசுப்பிரமணியன் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த போட்டோக்களில் கத்தி, அரிவாள், வாள் போன்றவைகளை வைத்து பாலசுப்பிரமணியன் வணங்குகிறார்.
 ஆயுத பூஜை என்பது தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படக்கூடிய கருவிகளை சுத்தம் செய்து வழிபாடு நடத்தும் ஒரு பண்டிகையாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் ஆயுதங்களை வைத்து .பாலசுப்பிரமணியன் வழிபாடு நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே .பாலசுப்பிரமணியனுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்பவரும் இவர் தான். பாஜக மற்றும் இஸ்லாம் மதத்தினரை கடுமையாக விமர்சனம் செய்பவர்.

குமரி மாவட்டத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வரும் .பாலசுப்பிரமணியன் ஆயுத பூஜையின் போது அரிவாள் ,வேல்கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவர் மீது வழக்கு பாய வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி


 வான்வழி தாக்குதலில்

4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 28 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் இத்லிப் மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள அமனாஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலுல் நான்கு குழந்தைகள் உட்பட 28 பொதுமக்கள் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை சிரியா அரசுப்படை நடத்தியதா அல்லது ரஷிய படை நடத்தியதா என்பது தெரியவில்லை.

இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வளையம் அமைப்பதற்கு ரஷிய அதிபரும், துருக்கி பிரதமரும் கடந்த வியாழக்கிழமை ஒப்புக்கொண்டனர். எனினும், இந்த தாக்குதலினால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆங் சான் சூ கீ புகைப்படத்தை அகற்றியது ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்


ஆங் சான் சூ கீ புகைப்படத்தை அகற்றியது

க்ஸ்போர்டு பல்கலைக்கழகம்




ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டது.
மியான்மரின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி. இவர் 1967-ல் லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குட்பட்ட இந்த கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். இதை தொடர்ந்து கடந்த 1999 முதல் அந்த கல்லூரியில் அவரது புகைப்படம் இடம்பிடித்தது.
நோபல் பரிசு பெற்ற இவரை கடந்த 2012-ம் ஆண்டில் செயின்ட் ஹூக்ஸ் கல்லூரி தனது கல்லூரிக்கு அழைத்து கெளரவித்தது.
இந்நிலையில், இந்த கல்லூலியின் நுழைவு வாயிலில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அகற்றியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், கண்காட்சியில் வைப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் புதிய ஓவியங்கள் கிடைத்துள்ளன. எனவே, ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஆனால், மியான்மர் நாட்டில் அவதிப்பட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் சூ கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிறு பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க !


சிறு பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்ற

பிரதமர் ரணில் விக்ரமசிங்க  !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சிறு பிள்ளைகளுடன் ஒன்றாக இணைந்து ஒரே வகுப்பறையில் பாடம் கற்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தி வைக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பாடம் கற்றுள்ளனர்.

இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.




பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை


பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில்

ஆர்ப்பாட்டத்திற்குத் தடை




மியன்மார் ரொஹிங்ய அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  ரத்கம பொலிசார் இந்த தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, அகதிகளுக்கெதிராக சமிபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்ர்.

இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளா தாக கல்கிசை பொலிசார் தெரிவித்துள்ளனர்

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர் விடுதித் திறப்பு விழா பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


முசலி தேசிய பாடசாலை ஆசிரியர் விடுதித் திறப்பு விழா

பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மன்னார் முசலி தேசியபாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதித் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் அஹுபார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிறுவனத்தின் அதிகாரி நுஹ்மான், கிரபைட் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அலிகான் ஷரீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸீல் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




அடம்பன் மகாவித்தியாலயத்தில் "நிலமெவகர" ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் அமைச்சர்களான வஜ்ர அபேவர்தன ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம்


அடம்பன் மகாவித்தியாலயத்தில்

"நிலமெவகர" ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம்

அமைச்சர்களான வஜ்ர அபேவர்தன ரிஷாட் பதியுதீன்

ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம்

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் "நிலமெவகர" ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜ்ர அபேவர்தன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் டிமெல், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை ஆளுனரின் கையில் நிர்வாகம்


நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை

ஆளுனரின் கையில் நிர்வாகம்


கிழக்கு மாகாணசபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுனர் ரோகித போகொல்லாகம நாளை கையில் எடுத்துக் கொள்ளவுள்ளார்.

2012ஆம் அண்டு செப்டெம்பர் மாதம் நடந்த தேர்தலை அடுத்து, அதே மாதம் 30ஆம் திகதி ஆரம்பித்த கிழக்கு மாகாணசபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இன்று நள்ளிரவுடன் கிழக்கு மாகாணசபை தானாகவே கலைந்து விடும் நிலையில், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய சபை தெரிவு செய்யப்படும் வரையில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகமவே நிர்வாகத்தை நடத்துவார்.


இன்றுடன் கலையும்- 37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1ஆசனத்தையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.