Tuesday, September 5, 2017

நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் வாகனங்களின் வேகம் செலுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவின் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

மணித்தியாலத்திற்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொணடுள்ளார்.

வாகனங்களுக்கு இடையிலான இடைவெளியை 50 மீற்றராக பேணுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அதிக வேகத்தில் பயணித்த வான் ஒன்றும் அம்புலன்ஸ் வண்டியொன்றும் நேற்று காலை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகின. இதனால் எட்டுப் பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹேமாகம கந்தலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலையில் பணி புரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியொன்றும் இராணுவ ட்ரக் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நேர்ந்தது. எனினும் ஆடை தொழிற்சாலை யுவதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

No comments:

Post a Comment