Tuesday, September 5, 2017

அக்குரேகொட பாதுகாப்பு படை தலைமையகப் பகுதிக்கு ஜனாதிபதி விஐயம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (05) முற்பகல் பெலவத்த, அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்படும் பாதுகாப்பு படை தலைமையக கட்டிட தொகுதிக்கு விஜயம் செய்தார்.

குறித்த திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி , குறைபாடுகள் இருப்பின் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, பிரச்சினைகளை தீர்த்து விரைவாக திட்டத்தை நிறைவு செய்யுமாறு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், பொறியிலாளர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா உள்ளிட்ட முப்படை உயரதிகாரிகள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ ஆகியோரும் இவ் விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

No comments:

Post a Comment