Tuesday, September 5, 2017

தாமரைக் கோபுரப்பகுதிக்கு ஜனாதிபதி விஐயம்

இலங்கையின் மிக உயரமான நிர்மாணமாக கருதப்படும் தாமரைக் கோபுரத்தின் நிர்மாண நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று (05) முற்பகல் பார்வையிட்டார்.

பொறியியலாளர்களுடன் நட்பாக உரையாடிய ஜனாதிபதி அவர்கள், நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து, திட்டத்தை வினைத்திறனாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

நிர்மாண வேலைகள் நிறைவடையும் போது கோபுரத்தின் உயரம் இடிதாங்கியுடன் 350 மீற்றர் ஆக இருக்கும். ஆடம்பர கடை தொகுதிகள், உணவகங்கள், விழா மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்படுகிறது.

அனைத்து நிர்மாண வேலைகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment