Thursday, March 29, 2018

கண்டி கலவரம் தொடர்பாக கைதான அமித் வீரசிங்க உள்ளிட்ட முக்கிய சந்தேகநபர்கள் 10 பேருக்கும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்


கண்டி கலவரம் தொடர்பாக கைதான
அமித் வீரசிங்க உள்ளிட்ட
முக்கிய சந்தேகநபர்கள் 10 பேருக்கும்
ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை
தொடர்ந்தும் விளக்கமறியல்


கண்டியில் இம்மாதம் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைதான,  அமித் வீரசிங்க உள்ளிட்ட முக்கிய சந்தேகநபர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த 10 பேரும் இன்று 29 ஆம் திகதி  தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கண்டி, குண்டசாலை பிரதேச சபைக்கு தெரிவான, சிறி லங்கா பொதுஜன பெரமுண கட்சி சார்பில் தெரிவான பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மற்றுமொருவர், தீவிரவாத விசாரணை பிரிவால் (TID) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று 28 ஆம் திகதி இரவு கைதான குறித்த சந்தேகநபர்கள் இருவர் இன்றைய தினம்  29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment