Thursday, March 29, 2018

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர்ரிஷாத்பதியுதீன்வாழ்த்து


கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில்

சித்தியடைந்த மாணவர்களுக்கு

அமைச்சர் ரிஷாத் தியுதீன் வாழ்த்து


இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்துள்ள  அனைத்து மாணவர்களுக்கும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திறமையாக சித்திபெற்றுள்ள இந்த மாணவர்கள் தமது எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து பல சாதனைகள் நிலை நாட்டுவதுடன் நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த பிரஜைகளாக வெளிவரவெண்டும் எனவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை இரு கரம் ஏந்தி பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் மேலும்  தெரிவித்துள்ளார்.
விஷேடமாக இந்த மாணவர்களுக்கு  வழிகாட்டியாக இருந்து  பாடுபட்ட, பாடசாலைகளின் அதிபர்கள், , கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment