Thursday, March 1, 2018

இலங்கையின் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிட்டது அல்-ஜெசீரா


இலங்கையின் சித்திரவதைகள் குறித்த
புதிய ஆதாரங்களை வெளியிட்டது அல்-ஜெசீரா

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்கள்  தாக்கப்படுவதாகவும் அவர்கள்மீதான சித்திரவதைகள் தொடர்வதாகவும் அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.
தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொலி சாட்சியங்களுடன் அல்- ஜெசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தமிழர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக இந்த காணொலிப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
180301070109291.html
குறிப்பு: தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்களை உரிய இடங்களுக்கு அறிவிப்பதுடன் அதனை வெளி உலகத்திற்கும் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்படுவது குறித்து இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.



No comments:

Post a Comment