Monday, April 2, 2018

முச்சக்கர வண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம்


முச்சக்கர வண்டியும் லொறியும் 
நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்  பலி
இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம்

தம்புள்ளை, கொழும்பு பிரதான வீதியில் கலேவல, யட்டிகல்பொத்த எனும் இடத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது தம்புள்ளை மற்றும் கலவெல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தியவர் 20 வயதான மகன் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments:

Post a Comment