Thursday, May 3, 2018

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி உயர்வு விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதியே இத் தீர்மானம் என அமைச்சு அறிவிப்பு


உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான
இறக்குமதி வரி உயர்வு
விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதியே
இத் தீர்மானம் என அமைச்சு அறிவிப்பு


உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் வரி 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் வரி 39 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதியே அமைச்சு இத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய பயிச் செய்கையில் ஈடுபட்டு வரும் உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவனற்றை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு தங்களது விளைச்சாலை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 25 ரூபாவிலிருந்து 35 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment