Thursday, May 31, 2018

தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று ஆரம்பம்


தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான
விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று ஆரம்பம்



அடுத்தாண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அடுத்த மாதம் 30ம் திகதி வரை விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கலாமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் கமனி பெரேரா தெரிவித்துள்ளார்.
இம்முறை இதில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment