Monday, July 2, 2018

தேர்தல் நெருங்கும் போது தெருதெருவாக மில்லியன் தொகையை நிதியுதவி செய்யும் மூஸ்லிம் காங்கிரஸ் தலைவர்


தேர்தல் நெருங்கும் போது தெருதெருவாக மில்லியன் தொகையை நிதியுதவி செய்யும்  மூஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை சந்தைக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு!

நினைவூட்டுகின்றோம்.

கல்முனைப் பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு
அமைச்சர் ஹக்கீம் அவர்களால் 2017-07-09 ஆம் திகதி
சாய்ந்தமருதில் வழங்கப்பட்ட வாக்குறுதி!
ஓராண்டுக்குள் நிரந்தர மின்னொளி மைதானம்

தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள பல விளையாட்டு          மைதானங்கள்இருக்கின்ற போதிலும் கல்முனையில் அவ்வாறான வசதியுள்ள மைதானங்கள் இல்லாதது மிகுந்தகுறையாகும்இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இன்னும் ஒரு வருடத்துக்குள் கல்முனையில்பொருத்தமான ஒரு விளையாட்டு மைதானத்துக்கு மின்னொளியில் விளையாடக்கூடிய வசதிகள் செய்துதரப்படும் என மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வாக்குறுதி ஒன்றை வழங்கினார்.
சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்தவிளையாட்டுக்கழகத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான .எல்..மஜீத்தலைமையில் “லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த கிண்ணம் 2017” கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி 72 விளையாட்டுக்கழகங்கள் தொடராக 6 நாட்கள் 5 ஓவர்களைக் கொண்ட 7 வீரர்கள் பங்குகொண்ட
போட்டியின் இறுதி நாளான 2017-07-09 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த வாக்குறுதி ஒன்றை வழங்கினார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனைப் பிரதேச இளைஞர்களுக்கு வழங்கிய  இந்த வாக்குறுதியும் காற்றில் கலந்துவிட்ட வாக்குறுதிகளில் ஒன்றாகிவிட்டதா?





No comments:

Post a Comment