Monday, July 2, 2018

பாடசாலைகள் நாளை புதன்கிழமை மூடப்படமாட்டாது


பாடசாலைகள் நாளை புதன்கிழமை மூடப்படமாட்டாது



நாடாளவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் போலி பிரசாரங்களை ஊடகங்களின் மூலம் வழங்குவதன் ஊடாக முழு பாடசாலை கட்டமைப்புக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தினார்..
ஊழல் மோசடி, விரயம், திருட்டு போன்ற செயற்பாடுகளி;ல் இருந்து கல்வித்துறை மீட்கப்பட்டுள்ளது. நியமனங்களும் கல்வி உயர்வுகளும் அரசியல் பேதங்கள் இன்றி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தொழிற்சங்கங்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
4ஆம் திகதி பாடசாலை மூடப்படுமென வெளிவரும் தகவல்களால் 42 இலட்ச மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தனிநபர்களின் அரசியல் தேவைகளுக்காக கல்வியுடன் விளையாடுவதை தவிர்க்குமாறு சகலரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment