Tuesday, July 3, 2018

தெல்லிப்பளையில் பொலிஸ் கான்ஸ்டபில் தற்கொலை


தெல்லிப்பளையில் பொலிஸ் கான்ஸ்டபில் தற்கொலை


யாழ்ப்பாணம்தெல்லிப்பளை பொலிஸ்நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபில் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் சந்தியிலுள்ள காங்சேன்துறை பிராந்திய சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபில் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
25 வயதுடைய என்.நஸீர் என்னும் திருகோணமலையைச் சேர்ந்த பொலிஸ்உத்தியோகத்தரே இவ்வாறு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து அவரது ஏகே 47 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




No comments:

Post a Comment