Wednesday, October 31, 2018

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றபோது கீழே விழுந்த அதிகாரி



மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றபோது
கீழே விழுந்த  அதிகாரி

இது அபசகுனத்திற்கான அறிகுறி என 
சமூக வலைதளங்களில் செய்தி


புதிய பிரதமராக ஹிந்த ராஜபக் பதவி ஏற்றபோது பிரதமரின் செயலாளர் கீழே விழுந்து விட்டார். இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. அதே நேரம் இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

இலங்கையில் புதிய பிரதமராக ஹிந்த ராஜபக் நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். அப்போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்து விட்டார்.

கீழே விழுந்த பிரதமர் மஹிந்தவின் செயலாளர் சிறிசேன அமரசேகரவை, அருகில் நின்ற சி.பி.இரத்நாயக்க உள்ளிட்ட மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதூக்கி எழுப்பி விட்டனர்.

இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. எனினும்  மஹிந்த  ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர்.

செயலாளர் கீழே விழவில்லை. அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் புதிய பிரதமரின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment