மேல் மாகாணசபையில்
முதலமைச்சர் உரையாற்றும் போது
ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள்
மேல்
மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை
முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த
போது, ஆளும்
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி
உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக்
கொண்டிருந்தனர் என்ற தகவல் ஒன்று
வெளியாகியுள்ளது..
மேல்
மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் நேற்று
2019ஆம் ஆண்டுக்கான
வரவுசெலவுத் திட்டம், முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
முதலமைச்சர்
வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த
போது, ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணி உறுப்பினர்கள்,
ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனராம்.
பத்தரமுல்லவில்
அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண
சபை உறுப்பினர்களுக்கு
அதிகாரபூர்வ கணினி உள்ளிட்ட வசதிகளும் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த
கணினிகளிலேயே, வயதான மாகாணசபை உறுப்பினர்கள் கூட,
ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனராம்.
இந்த விவகாரம்
பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment