Thursday, December 27, 2018

முதலாம் திகதியிலிருந்து கடவுச்சீட்டுகளில் மாற்றம் வெளியான விசேட அறிவித்தல்


முதலாம் திகதியிலிருந்து கடவுச்சீட்டுகளில் மாற்றம்
வெளியான விசேட அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் என்று விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு -குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை இரத்துச்செய்யப்படுமென, குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment