Thursday, January 31, 2019

இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா



இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு
புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா


காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள 71 ஆவது தேசிய தின நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.

தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. அவ்வாறான நிலையில் இந்தப் பதவிக்கு உரியை கௌரவம் கொடுக்கப்படா விட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்புக்கான, ஒத்திகை நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விருந்தினர்களின் பட்டியல்  அறிவிக்கப்பட்டது. அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment