Thursday, January 31, 2019

மட்டக்களப்பு கோர விபத்தில் பரிதாபமாக பலியான ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர்


மட்டக்களப்பு கோர விபத்தில் பரிதாபமாக பலியான
ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர்


மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தை வீதி, செங்கலடியை சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் என்ற 48 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இவர் இன்று காலை கடமைக்காக மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வீதியால் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment