Monday, February 25, 2019

. கொழும்பில் பிரபல அரசியல்வாதியின் மகன் அதிரடியாக கைது


கொழும்பில் பிரபல அரசியல்வாதியின்
மகன் அதிரடியாக கைது


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற விபத்து தொடர்பில் குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற நபர்களை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட  ஐ தே க கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துமிந்த ஆர்ட்டிகல மற்றும் டிபெண்டரின் உரிமையாளர் - டிபெண்டரை செலுத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி - டிபெண்டர் மோதிய சம்பவத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொரளை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சரத்சந்திரவின் இடுப்பு எலும்பு முறிந்து தீவிர தலைக்காயங்கள் மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹெல்மெட் இல்லையென்றால் நேற்று விபத்து நடந்தவுடன் அவர் உயிரிழந்திருக்கக் கூடுமென சொல்லப்படுகிறது.  


No comments:

Post a Comment