Friday, March 29, 2019

அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை


அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகளை
இணைத்துக்கொள்ள நடவடிக்கை



அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளுக்கு தமது வல்லமையை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். பட்டதாரிகளிடமிருந்து தேவையான சேவை கிடைக்காமை பாரிய பிரச்சினையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment