Friday, March 1, 2019

மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்ளூர் விமான சேவை ஆரம்பம்

மட்டக்களப்பு விமான நிலையத்தில்
உள்ளூர் விமான சேவை ஆரம்பம்

மட்டக்களப்பு வவுனதீவு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் .எம்.ஜௌபர் தலைமையில்,  இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்..எம் ஹிஸ்புழ்ழாஹ் இந்த விமானசேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலி சாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர, வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விமான சேவை திங்கள் ,புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.








No comments:

Post a Comment