Friday, May 31, 2019

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து


அட்டாளைச்சேனை பிரதான வீதியில்
மோட்டார் சைக்கிள் விபத்து

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று முதலாம் திகதி ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் ஒருவர் தற்போது அக்கறைப்பற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.







அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரனும் மட்டக்களப்பில் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்தவர் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறாராம்



அத்துரலிய ரத்ன தேரருக்கு

ஆதரவு தெரிவித்து வியாழேந்திரனும்
மட்டக்களப்பில் போராட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்தவர்
தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறாராம்




பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் . வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று காலை 7 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய  சுமங்கள தேரரும் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகளித்த மக்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பதவி ஆசை நிமிர்த்தம்  துரோகமிழைத்த வியாழேந்திரன் ஏதோ ஒரு தனிப்பட்ட அஜந்தாவை வைத்துக்கொண்டு தற்போது தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறாரார் என இவரின் அண்மைக்கால செயல்பாடுகளை அவதானிக்கும் நடுநிலை மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.







பயங்கரவாத தலைவரை சந்தித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள்.. ஞானசாரரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு




பயங்கரவாத தலைவரை சந்தித்த
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள்..
ஞானசாரரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு



பயங்கரவாத தலைவர் ஒருவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்ததாக கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா முற்றாக நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

“2013 ஆம் ஆண்டில் கட்டார் நாட்டில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கட்டார் நாட்டு அரச தலைவரின் ஆலோசகராக செயற்படும் மார்க்க அறிஞர் ஒருவரான யூசுப் அல் கர்ளாவி குறித்த மாநாட்டின் போது எமது அமைப்பின் பிரதி நிதிகளை சந்தித்தார்.

அந்த சந்திப்பு எவ்வித இரகசியமான ஒரு சந்திப்பாக இருக்கவில்லை என்பதுடன், கலகொடஅத்தே ஞானசார தேரரினால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட புகைப்படம் 2013 ஆம் ஆண்டில் எமது அமைப் பினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் வெளியான புகைப்படமாகும்.

யூசுப் அல் கர்ளாவி என்பவர் அல்ஜஸீரா தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்படும் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியொன்றை நடாத்துபவரும், தற்பொழுது கட்டார் அரசின் மற்றும் கட்டார் அரச தலைவரின் ஆலோசகர் ஒருவராக செயற்படும் மார்க்க அறிஞருமாவார்.

குறித்த சந்திப்பின் போது அவர் எமது அமைப்பிடம் தெரிவித்ததாவது, இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினரான பௌத்த மக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதே.

அவ்விடயம் பத்திரிகைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நிராகரித்து இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப தற்பொழுது எமது அமைப்பு கடும் பிரயத்தனம் எடுத்து செயற்படும் இத்தருணத்தில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அந்த வேலைத்திட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என நாம் அனைத்து தரப்பினரிடமும் வேண்டிக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


எனது காரியாலயம் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் எப்போதும் திறந்தேயிருக்கும் - சட்டத்தரணி சறூக்


எனது காரியாலயம் ஏழைகளுக்காகவும்
ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும்
எப்போதும் திறந்தேயிருக்கும்
-    சட்டத்தரணி சறூக்

தர்மச்சக்கர? வடிவத்தினால் சிறையில் வாடும் சகோதரி மஸாஹிமாவின் கணவர் முனாப் இன்று எனது காரியாலயத்திற்கு சமூகமளித்தார்,

நானும் எனது மனைவியும் அவருக்கான மன ஆறுதல்கள் பலவற்றை கூறி அவரை தைரியப்படுத்தினோம்.அவர் எமக்காக துஆ செய்ததுடன் அவரின் வீட்டுத்தோட்டத்தில் பறிக்கப்பட்ட மிளகு பொதியொன்றை அன்பளிப்பாக எமக்குத் தந்தார்.ஏழையின் துஆவுடன் எனக்கு தரப்பட்ட அந்த மிளகு பல கோடி பெறுமதியானதாக அமைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

சட்டத்தரணி சறூக் -கொழும்பு 0771884448




முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதி


முஸ்லிம் பெண்களின் ஆடை
தொடர்பில் புதிய சுற்று நிருபம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதி


அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிருபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சந்தித்து முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் உடன்பாடு கண்ட விடயத்துக்கு மாற்றமாகவே இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதென்றும் இதனை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் கோரிக்கை விடுத்த போதே அவரால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் குண்டுத்தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்களின் விடுதலை தொடர்பில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டு அது தொடர்பிலான உறுதிமொழிகள் அரச உயர்மட்டத்தினால் வழங்கப்பட்ட போதும் தொடர்ந்தும் அந்த விவகாரம் இழுத்தடிக்கப்படுவதையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் நினைவுபடுத்தினார்.

வாக்குறுதிகள் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென தமது விசனத்தை வெளியிட்ட அமைச்சர், தொடர்ச்சியாக முஸ்லிம்கள் ஏதாவதொரு வகையில் வதைக்கப்படுவதாகவும் இம்சிக்கப்படுவதாகவும் பிரதமரிடம் கவலை வெளியிட்டார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததைப் போன்று முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்திலும் அலட்சியம் செய்யப்பட்டால் மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுரிதாருக்கு துப்பட்டா அவசியம் : பெண் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு இது தமிழகத்தில்


சுரிதாருக்கு துப்பட்டா அவசியம் :
பெண் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
இது தமிழகத்தில்



அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சல்வார் கமீஷ் மற்றும் சுரிதார் அணிந்து வந்தால் கட்டாயம் துப்பட்டா அணிந்து வர வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
                                                        
தமிழர்களின் உடை நாகரிகம் தற்போது மாற்றம் அடைந்துள்ளது. சேலை அணிந்து வந்த பெண்கள், வேட்டி அணிந்து வந்த ஆண்கள் நவ நாகரிக உடைகளை அணியத் தொடங்கி உள்ளனர்.

'பேஷன்' என்ற பெயரில் அரைகுறை ஆடை அணிவது அதிகரித்து வருகிறது.இதை தவிர்க்க அரசு ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு வரும் போது சுத்தமான நல்ல உடைகளை அணிந்து வர வேண்டும்.

பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் சேலை, சல்வார் கமீஷ், சுரிதார் ஆகியவற்றை அணிந்து வரலாம். சல்வார் கமீஷ், சுரிதார் உடன் துப்பட்டா அணிந்து வர வேண்டும்.

ஆண் ஊழியர்கள் பேன்ட், சட்டை அணிந்து வர வேண்டும்; சாதாரண உடையில் வருவதை தவிர்க்கவும். நீதிமன்றம் மற்றும் விசாரணை கமிஷனுக்கு செல்லும் அதிகாரிகள் 'கோட்' மற்றும் 'டை' அணிந்து செல்ல வேண்டும்.

பெண் அலுவலர்கள் சேலை, துப்பட்டாவுடன் சல்வார் கமீஷ், சுரிதார் அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் சம்பவ இடத்திலேயே பலி பதற்றத்தில் மக்கள்


அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு!
12 பேர் சம்பவ இடத்திலேயே பலி
பதற்றத்தில் மக்கள்

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசு கட்டடம் ஒன்றில் பாரபட்சம் இன்றி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் அந்நாட்டு பொலிஸ் அதிகாரி எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 12 பேரின் அடையாளங்கள் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சக குடிமக்களை சிலர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.









குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

குண்டு தாக்குதலை மையப்படுத்தி
தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின்,
அது பயங்கரவாதத் தாக்குதலைவிட
படுமோசமான செயலாகவே அமையும்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்


குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று ( 31) மாலை இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார்.


இதன்போது, “21/4 தாக்குதலை காரணம்காட்டி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகின்றது.

எனவே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவாக இருக்கின்றது.’’ என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற திகதி விபரத்தையும்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.


இதன்படி நவம்பர் 15 அல்லது டிசம்பர் 07 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.

“1988 ஆம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நிலைமை படுமோசமாக இருந்தது. பலவழிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாடே பதற்றமடைந்திருந்தது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.

எனவே, குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும்.

நவம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு வரும் ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அது டிசம்பர் 9 ஆம் திகதியை தாண்டிதாக இருக்ககூடாது.

ஆகவே, உடன் நடத்துவதாக இருந்தால் நவம்பர் 15 ஆம் திகதியும், காலக்கெடுவரை காத்திருந்து நடத்துவதாக இருந்தால் டிசம்பர் 7ஆம் திகதியும் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம்.’’ என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.


இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி


இலங்கைக்கு அனைத்து
உதவிகளையும் வழங்கத் தயார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுசில் இன்று முற்பகல் நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போ தே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியப் பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிராந்தியத்தின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்காக, இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட இந்தியப் பிரதமர், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு உறவுகளை, மேலும் வளர்ப்பதில் தமது அரசாங்கம் உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பன மனித குலத்துக்கு தொடர்ந்தும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, அமைதிக்காக இரண்டு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பை பேணவும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.