Friday, May 31, 2019

மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதா இது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை – புதுடெல்லியில் மனம் திறந்தார் ஜனாதிபதி


மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதா
இது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை
புதுடெல்லியில் மனம் திறந்தார் ஜனாதிபதி



மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதா என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு  நிகழ்வில் பங்கேற்க இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தாம் அவசரப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment