Thursday, May 2, 2019

சம்மாந்துறையில் பாரிய சுற்றிவளைப்பு! ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிப்பு


சம்மாந்துறையில் பாரிய சுற்றிவளைப்பு!
ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேசத்தில் இன்றையதினமும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மற்றுமொரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தைக்கா பள்ளிவாசல் வீதிக்கு அருகாமையில் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் 4 வாள்கள், 2 கத்திகள், 1 செயலிழந்த தொலைநோக்கி, 4 செயலிழந்த கைத்தொலைபேசிகள், ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 27, மான் கொம்பில் தயாரிக்கப்பட்ட கூரான உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் அப்பகுதியில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாயில் பொலித்தீன் ஒன்றினால் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்படுகின்றது..

எந்த சந்தேக நபர்களும் இச்சுற்றிவளைப்பில் கைதாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment