Sunday, June 2, 2019

சிறை சென்ற எனக்கு மரணம் பெரிய விடயமில்லை! ஞானசார தேரர் இன்று விடுத்துள்ள எச்சரிக்கை


சிறை சென்ற எனக்கு
மரணம் பெரிய விடயமில்லை!
ஞானசார தேரர் இன்று விடுத்துள்ள எச்சரிக்கை



நாளை நண்பகல் 12 மணிக்குள் தீர்வு எடுக்கவில்லை என்றால் அனைத்து பிக்குகளும் வீதிக்கு இறக்குவோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தேகொட ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடனடியாக அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலியின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும்.

இதனை வலியுறுத்தியே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டியில் உண்ணா விரதம் இருக்கிறார்.

தேரரின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் அரசாங்கம் பாரிய விளைவுகளை சந்திக்கும் என தேரர் எச்சரித்துள்ளார்.

உண்ணா விரதம் இருக்கும் ரத்ன தேரரை இன்று சென்று சந்தித்த வேளையில் ஞானசார தேரர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.







No comments:

Post a Comment