Tuesday, July 2, 2019

புகையிரதம் மோதி 10 மாடுகள் பலி


புகையிரதம் மோதி 10 மாடுகள் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடன் தாண்டிக்குளம் பகுதியில் 10.45மணியளவில் புகையிரதக்கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளே இவ்வாறு குறித்த புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளன.

தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பயணிகள் தரிப்பிடப்பகுதிக்கு பின்பாகவுள்ள மாடுகளும் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகே ஒரு மாடும் இவ்வாறு புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றது.

கடந்த வாரம் முகமாலை பகுதியில் 21 ஆடுகள் புகையிரதக்கடவையில் சென்றபோது புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளது தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான கால நிலை காரணமாகவே கால் நடைகள் மேய்ச்சல் தரைகளை, தண்ணீரை நாடிச் செல்லும்போது புகையிரதக்கடவைகளிலுள்ள பயிர்ச் செடிகளை உண்ணுவதற்காகச் சென்றபோது இவ்வாறு உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment