Tuesday, July 2, 2019

தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறார் மைத்திரி!


தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறார் மைத்திரி!



தமக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் தாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி இந்த விடயங்களை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment