ஜனாதிபதி வேட்பாளர் களத்தில்
மக்கள் விடுதலை முன்னணியின்
 வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க
இன்று அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.  


20 வருடங்களின் பின்னரே இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டிருந்தார்.


அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவிற்கும், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவிற்கும் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

என்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தெரிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்தி அமைப்பிற்கு தங்களது நம்பிக்கையை காப்பாற்றுவேன் என உறுதிமொழி வழங்குகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தற்பொழுது காலி முகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மாநாட்டில் இவர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றுகையில் இதனைக் கூறினார். 








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top