Sunday, January 19, 2020

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி


இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

'பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் இனி இளவரசர் - இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்; மக்கள் வரிப் பணத்தையும் அவர்கள் பெற மாட்டார்கள்' என ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ் - மறைந்த டயானா தம்பதிக்கு வில்லியம்ஸ், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகனான ஹாரி 35 அமெரிக்காவைச் சேர்ந்தவரும் முன்னாள் நடிகையுமான மேகன் 38 என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக ஹாரியும் அவரது மனைவி மேகனும் அறிவித்தனர்.சாதாரண வாழ்க்கை வாழப் போவதாகவும் சுயமாக உழைத்து சொந்தக்காலில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஹாரியை சமாதானப்படுத்த ராணி எலிசபெத் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹாரியும் அவரது மனைவியும் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேற ராணி எலிசபெத் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

இது சர்வதேச நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த இரு ஆண்டுகளாகவே ஹாரியும் மேகனும் எதிர்கொண்ட சவால்களை உணர்கிறேன். சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

கடந்த சில நாட்களாகவே இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் விவாதங்கள் நடந்தன. ஆனாலும் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதில் இருவரும் உறுதியாக இருந்தனர். அவர்களது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.மேகன் திருமணமான சில மாதங்களிலேயே அரச குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராக விரைவாக மாறியதை பெருமையாக நினைக்கிறேன்.ஹாரியும் அவரது மனைவி மேகனும் இனி பெருமைக்குரிய இளவரசர் இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்.

அதேபோல் பொதுமக்கள் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள். விண்ட்ஸ்டர் எஸ்டேட்டில் தங்கள் வீட்டை சீரமைப்பதற்காக வரிப் பணத்திலிருந்து 22 கோடி ரூபாயை இருவரும் பெற்றிருந்தனர்; அதையும் அவர்கள் திரும்ப தந்து விடுவர். அரச குடும்பத்துக்கான பணிகள் எதிலும் இருவரும் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாரியின் தாயான மறைந்த டயானா இளவரசர் சார்லசிடமிருந்து 1996ல் விவகாரத்து பெற்றார். இதையடுத்து அவரிடமிருந்து இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.




ஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி - கைது செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற பொலிஸார்


ஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி
 - கைது செய்து சரக்கு வாகனத்தில்
 ஏற்றி சென்ற பொலிஸார்
  
.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த பயங்கரவாதியை கைது செய்த பொலிஸார் அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால் சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர் என ஊடகங்கள் படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.

.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஈராக். அங்கு அவர்களை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அமெரிக்க படைகளும் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனாலும் அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. அவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு .எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த அபு அப்துல் பாரி என்பவர், அடிக்கடி இதுபோன்ற மிரட்டல்களை விடுத்து வந்தார். அவரை ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் சுற்றிவளைத்து கைது செய்தது.

சுமார் 250 கிலோ எடை கொண்ட அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால், சரக்கு வாகனத்தில் பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.

.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படாத மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் அபு அப்துல் பாரி பிறப்பித்து உள்ளார் என ஈராக் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.





சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வும் ஊழியர்கள் கௌரவிப்பு விழாவும்!!


சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை
 பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வும்
ஊழியர்கள் கௌரவிப்பு விழாவும்!!

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியில் பீப்பல்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பீ . எல் . சி நிறுவனத்தின் அல் - ஸபா இஸ்லாமிய நிதிப் பிரிவு கல்முனை கிளை ஊடாக அந்நிறுவனத்தின் சமூக கூட்ட பொறுப்புடமை ( Corporate Social Responsibility - CSR Project ) நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வு நேற்று 2020.01.19 மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வுடன் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தகர்கள் பாராட்டு நிகழ்வும் நடைபெற்றது.

வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழு பிரதி தலைவர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலைமை வைகித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி . ஜீ . சுகுணன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் . எல் . எம் . மிஹ்ளார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வைத்தியதுறைக்கு தம்மை அர்ப்பணித்த உத்தியோகத்தர்கள், ழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.









மத ஒற்றுமைக்கு உதாரணமாக பள்ளிவாசல் வளாகத்தில் ஹிந்து திருமணம் 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட்களும், ஜமாஅத்தினர் சார்பில்


மத ஒற்றுமைக்கு உதாரணமாக
பள்ளிவாசல் வளாகத்தில்
 ஹிந்து திருமணம்
10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் 
மதிப்புக்கு பொருட்களும்
ஜமாஅத்தினர் சார்பில்

எமது அண்டை நாடான இந்தியாவில், பள்ளிவாசல் வளாகத்தில், ஹிந்து முறைப்படி, ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார். தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறார், பிந்து.இந்நிலையில், தன் மகள் அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க, பிந்து ஏற்பாடு செய்தார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலாளர், நிஜாமுதீன் அலுமூட்டிலிடம், உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், அலுமுட்டி ஆலோசனை நடத்தினார். பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது.

அஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, பள்ளிவாசல் வளாகத்திலேயே, ஹிந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று (ஜன.,19) காலை, செருவாலி பள்ளிவாசல் வளாகத்தில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், ஹிந்து முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தது. திருமணத்துக்காக, ஜமாத் சார்பில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, சைவ உணவு விருந்து தயாரிக்கப்பட்டது.

திருமணத்தில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் அளவில் பங்கேற்று, விருந்து சாப்பிட்டு, மணமக்களை வாழ்த்தினர். பள்ளிவாசல் வளாகத்தில் ஹிந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக, கேரளா எப்போதும் விளங்குகிறது. 'மதத்தின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என, கூறியுள்ளார்.





சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் சிறுபான்மை சமூகத்தின் தயவின்றி ஆட்சியமைக்க முஸ்தீபு: முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்



சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும்

 பேரினவாதிகளின் திட்டம்
சிறுபான்மை சமூகத்தின்
 தயவின்றி ஆட்சியமைக்க முஸ்தீபு:
முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்





சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுபாண்மை  மக்களின் வாக்குகளை செல்லாக் காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்றில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களுக்கு எதிரான குரோதப்போக்கு இன்னும் தொடர்கின்றது. சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை வீழ்த்துவதற்கு சதிகள் இடம்பெறுகின்றன.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவ வெட்டுப்புள்ளியை அதிகரிக்கின்ற கோசங்கள் முனைப்படைந்துள்ளன. இதன்மூலம், சிறுபான்மை மக்களை தேடுவாரற்றவர்களாக மாற்றுவதே அவர்களின் உள்நோக்கம்.

"எல்லோருக்கும் ஒரே சட்டம்என்ற புதிய கோசத்துடன், காலகாலமாக நமக்கிருக்கும் முஸ்லிம் விவாகரத்து சட்டத்தை இல்லாமலாக்க, ரதன தேரர் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும்.

பேரினவாதிகள் தாம் நினைத்தது போன்று, நாடாளுமன்றத்தில் செயற்பட நாம் வழிவிடலாகாது. சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க இடமளித்தோமேயானால், அவர்களின் செயற்பாடுகள் கட்டில்லாது போய்விடும். இந்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அப்பாவி மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும். ஏழ்மையையும், வறுமையையும் மூலதனமாகப் பயன்படுத்தி, வாக்குகளைச் சிதைத்து சின்னா பின்னமாக்கும் செயற்பாடுகள் அரங்கேறியுள்ளன.

நமது வாழ்வுரிமையையும் இருப்பையும் காப்பாற்றிக்கொள்வதற்காக, நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சமூகத்துக்கான ஒரு கட்சி. சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்ற ஒரு கட்சி. நமது சமூகத்துக்கென உருவாக்கப்பட்ட இந்த சமூகக் கட்சி, தமிழ் பேசும் மக்களுக்கான ஓர் இயக்கமாக இப்போது மிளிர்ந்துள்ளது.

சகோதரத் தமிழ் மக்கள் இந்தக் கட்சியில் ஈடுபாடு கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர். இந்தக் கட்சியின் வருகையானது குறிப்பாக, வடக்கு, கிழக்கில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஒரு உறவுப்பாலமாக பரிணாமம் எடுத்துள்ளது.

அதேபோன்று, பேரினவாத சக்திகளுக்கு இந்தக் கட்சி சிம்மசொப்பனமாக இருப்பதனாலேயே, கட்சித் தலைமை மீது அபாண்டங்களும் வீண்பழிச் சொற்களும் சுமத்தப்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்