Friday, January 17, 2020

உலகின் மிகச்சிறிய மனிதர் காலமானார்


உலகின் மிகச்சிறிய மனிதர் காலமானார்

நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதராக இருந்த ககேந்திர தபா மகர்(27) நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதலையை தன் வசம் வைத்திருந்தவர் நேபாளத்தை சேர்ந்த 27 வயதான ககேந்திர தபா மகர். 1992 ஆண்டு அக்.,14ல் பிறந்த மகர், 2010ம் ஆண்டு தனது 18வது வயதில் உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். அப்போது அவரது உயரம், 67.08 செ.மீ.,; எடை 6 கிலோ மட்டுமே. கடந்த ஆண்டு பிலிபைன்சின் ஜூன்ரேவிடம்(59.93செ.மீ., உயரம், 5 கிலோ), உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற பட்டத்தை தபா மகர் இழந்தார்.

இந்நிலையில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தபா மகர், பெகாராவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஜன., 17) மதியம் 3 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.








No comments:

Post a Comment