Wednesday, May 27, 2020

120 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுவன் தவிப்பு மீட்பு படையினர் போராட்டம்


120 அடி ஆழ ஆள்துளை
 கிணற்றில் விழுந்து
 3 வயது சிறுவன் தவிப்பு
மீட்பு படையினர் போராட்டம்

தெலுங்கானாவில் மூடாமல் வைத்திருந்த 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த, 3 வயது குழந்தையை மீட்க, மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பூச்சான்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த கோவர்த்தன் என்பவரின் 3 வயது மகன் சாய் வர்த்தன் அப்பகுதி விவசாய நிலத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த போது விவசாய நிலத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றின் உள்ளே சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

உடனடியாக காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த மாவட்ட காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் விழுந்த சம்பவம் அப்பகுதி கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment