Tuesday, June 30, 2020

சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 1லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியது


வூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு
 1ட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியது
  
வூதி அரேபியாவில் 1லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு முல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 48 பேர் பலியானதை அடுத்து அங்கு பலி எண்ணிக்கை 1,599 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



Monday, June 29, 2020

இலங்கையை சேர்ந்த நபரொருவர் சவூதியில் திடீரென உயிரிழப்பு



இலங்கையை சேர்ந்த நபரொருவர்
 சவூதியில் திடீரென உயிரிழப்பு

திருகோணமலை - கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபியாவில் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக உயிரிழந்துள்ள நபரின் மனைவிக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹையூன் என்ற 53 வயதுடைய ஒருவரே சவூதியில் உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையிலே இவர் உயிரிழந்துள்ளதாகவும், சடலத்தினை நாட்டுக்கு கொண்டுவருவதா அல்லது சவூதியில் நல்லடக்கம் செய்வதா போன்ற நடவடிக்கைகளை தூதரகம் ஊடாக உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.




Saturday, June 20, 2020

இலங்கையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை!!


இலங்கையில் வரலாறு காணாத அதிகரிப்பை
 பதிவு செய்த தங்கத்தின் விலை!!



இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தின கல் மற்றும் நகை ஆணைய அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் மாலை வரை ஒரு பவுண் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் இந்திய பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த 12ஆம் திகதி முதல் 10000 ரூபாய் வரையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இதற்கு பிரதான காரணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் தங்கத்திற்கு ஓரளவு நிலையான விலை கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சஹரானைப் போன்றே கருணாவும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார் அவரை உடன் கைது செய்யுங்கள்! தேரர்கள் கடும் அழுத்தம்


சஹரானைப் போன்றே கருணாவும்
மனிதப் படுகொலையைச் செய்துள்ளார்
அவரை உடன் கைது செய்யுங்கள்!
தேரர்கள் கடும் அழுத்தம்



சஹரானைப் போன்றே கருணாவும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார் படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் 3000 படையினரை கொன்றதாக கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே, கருணாவை உடன் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதேவேளை, மனித கொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்ய முடியும்.

இதற்கான நேரடியாக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தான் செய்த குற்றத்தை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். சஹரானைப் போன்றே இவரும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார்.

எனவே ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்என வர் மேலும் கூறியுள்ளார்.


பிரிவினைவாத தாக்குதல்கள் தொடர்பில் சஹ்ரான் கைது செய்யப்படாமைக்கான காரணம்


பிரிவினைவாத தாக்குதல்கள் தொடர்பில்
சஹ்ரான் கைது செய்யப்படாமைக்கான காரணம்


பிரிவினைவாத தாக்குதல்கள் தொடர்பில் சஹ்ரான் ஹசீம் அவருடைய சகோதரர் மொஹமட் ரில்வான் உள்ளிட்ட நால்வரையும் பிடியாணையின்றி கைது செய்வதற்கான இயலுமை காணப்பட்ட போதும் காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் கவனயீனத்தால் தவறவிடப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நேற்று முன் தினம் (19) ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2017 முதல் 2020 ஜனவரி வரைக்கும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரபாத் கஸ்துரியாராச்சி ஆணைக்குழுவில் சாட்சியளித்தார்.

2017 மார்ச் 10, அன்று கத்தான்குடி அல்லியார் சந்திப்பில் சஹ்ரான் ஹசிம் மற்றும் ரவூப் மௌலவி உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத்துல் வால் ஜமாஅத் ஆகிய அமைப்புகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் வாள்கள் மற்றும் பெட்றோல் குண்டை பயன்படுத்தி இந்த மோதம் இடம்பெற்றதாகவும் மோதலுக்கு பின்னர் சஹ்ரான் ஹசீம், மொஹமட் ரில்வான் ஆமீ மொஹமட், மற்றும் யூசுப் அன்வர் ஆகியோர் தப்பியோடியதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் கடமையை பொறுப்பேற்றகும் போதும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இடம்பெற்றதாகவும் பிரதேசத்தில் இருந்து தப்பியோடிய சஹ்ரான் ஹசீம் உள்ளிட்டவர்கள் அதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இதன்போது ஆணைக்குழு அதிகாரிகள் அவர்களை கைது செய்ய ஏன் பிடியாணை உத்தரவை பெற்றுகொள்ளவில்லை என வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர், சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்காமையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படும் வரை சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை என கூறினார்.

இது குறித்து இரசாயன பகுப்பாய்வாளருக்கு அறிவிக்கப்பட்டதா? என ஆணைக்குழு வினவியதற்கு அது தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லை என அவர் பதிலளித்தார்.

இதன்போது நீதிமன்ற அறிக்கையை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு, சம்பவம் குறித்த இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை 2018 ஜனவரி 30 திகதியன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டமை குறித்து அறிந்திருக்கவில்லையா? என வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு தெரியாது எனவும், அதனால் எந்தவித பிடியாணையும் பிறப்பிக்கப்படவில்லை என கூறினார்.

இதன்போது பதிலளித்த ஆணைக்குழு அதிகாரிகள் இரசாயன பகுப்பாய்வாளரின் ´பி´ அறிக்கையில் சஹ்ரான் மற்றும் ஏனையோரை கைது செய்ய போதுமான விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியது.

அதன்படி,

1. கூரிய ஆயுதங்களுடன் சட்டவிரோத கூட்டத்தில் கலந்துகொண்டமை.

2 கூரிய ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டமை

3 கிளர்ச்சியை அடக்குவதை அரசாங்க அதிகாரி ஒருவர் தடுத்தமை.

4 தன்னார்வமாக காயங்களை ஏற்படுத்தியமை.

5 ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களுடன் காயம் ஏற்படுத்தியமை.

உள்ளிட்ட கைது செய்வதற்கான விடயங்கள் ´பி´ அறிக்கையில் உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் நாயகம் தெரிவித்ததுடன் ஆணைக்குழுவிடம் இதுபோன்ற குற்றங்கள் தொடர்பில் தெரியபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது ஆணைக்குழு 2018 ஆம் ஆண்டு பிடியாணையுடன் சஹ்ரான் உள்ளிட்டவர்களை கைது செய்திருக்க முடியும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என வினவியது.

சாட்சிகள் உள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.

அப்படியானால் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் சாட்சிகள் இல்லை என நீங்கள் கூறியது எந்த அடிப்படையில் என அதிகாரிகள் வினவிய போது அவ்வாறு தெரிவித்தமை தவறு என கூறினார்.

உங்கள் கடமையை நீங்கள் சரிவர செய்யவில்லை என்பதை உணர்கிறீர்களா? என ஆணைக்குழு வினவியதற்கு அவர் மௌனமாக இருந்தார்.

எனவே சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்டவர்களை கைது செய்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் அப்பாவி உயிர்களை இழக்க வேண்டியிருந்திருக்காது அப்படிதானே என ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர் நீதிமன்றத்தால் எடுக்க வேண்டிய தீர்மானங்களை தாம் எடுத்தாக கூறினார்.

சஹ்ரான் ஹசீம் அவருடைய சகோதரர் மொஹமட் ரில்வான் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கியிருந்த ஒல்லிகுளம் வீட்டிலிருந்து உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லையா? என ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வாள்கள் உள்ளிட்ட பல கூரிய ஆயதங்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றியதாகவும் அவை உயிரித்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் உள்ள பல பள்ளிவாசல்களில் கைப்பற்றப்பட்ட வாள்களுக்கு சமமானவை என அவர் கூறினார்.

Friday, June 19, 2020

கொரோனா பரவலில் புதிய, அபாயகரமான கட்டத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


கொரோனா பரவலில் புதிய,
அபாயகரமான கட்டத்தில் உள்ளோம்:
 உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



உலக நாடுகளில் கொரோனா மிக அதி தீவிரமாக பரவுகிறது என்றும் நாம் புதிய மற்றும் அபாயகரமான ஒரு கட்டத்தில் உள்ளோம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது:

அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. நாம் தற்போது புதியதும் அபாயகரமானதுமான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது. இவ்வாறு டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக பரவிய செய்தி : களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்


பொத்துவில் முஹுது மகாவிகாரையை
அண்டிய பிரதேசங்களை அரசு
கையக்கப்படுத்த போவதாக பரவிய செய்தி :
களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்

பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியுள்ளது.

அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச செயலாளர் மக்களின் சார்பில் ஐவரை பிரதேச செயலகத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த போதிலும் அந்த சந்திப்பு நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச செயலகத்திற்கு சமுகமளித்த மக்களின் சார்பிலான பிரதிநிதிகளை சந்திக்க பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உயரதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாமல் இருந்த நிலையில் முஹுது மகாவிகாரை பிரதேசத்தில் நில அளவை திணைக்கள, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அளவிட வருகை தந்திருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

இந்த செய்தி பரவியதை அடுத்து மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கலகம் அடக்கும் பொலிஸார், இராணுவ வீரர்கள் களத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

அங்கு சமுகமளித்த வேட்பாளர் சட்டத்தரணி முஷாரப், பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் பொதுத்தேர்தல் வேட்பாளருமான எம்.எஸ். அப்துல் வாசித், ஆகியோர் அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரை தொடர்புகொண்ட போது நாளை மாலை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்த நேரம் வழங்கிய செய்தியை மக்களுக்கு வேட்பாளர்கள் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அடங்கிய குழுவினர் அண்மையில் பொத்துவில் பிரதேசத்திற்கும் விஜயம் செய்து பொத்துவில் முஹூது மஹாவிகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.







முஸ்லிம் சமூகத்தால் மறக்கத்தான் முடியுமா! இது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?


முஸ்லிம் சமூகத்தால் மறக்கத்தான் முடியுமா!
இது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?



இனபிரச்சினைக்கான பேச்சுவார்த்தை 2002 ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் ஆரம்பித்தபோது அப்போதைய பாராளுமன்றத்தில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்12 பேர் இருந்தனர்.

அன்றைய அரசாங்கத்தின் அச்சாணியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருந்தது. அத்தகைய நல்லதொரு சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் போது அரசு தரப்பில் அல்லாது முஸ்லிம் தரப்பில் கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமூகம் விரும்பியது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் பலரும் தனித் தரப்பாக வே ஹக்கீம் செல்லவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

விடுதலை புலிகளினுடனான இப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவே பங்கேற்க வேண்டும் என்று சமூகமே பலமான வேண்டுகோள் விடுத்தும் அதனைக் கிஞ்சிற்றும் கணக்கில் எடுக்காது அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே ஹக்கீம் கலந்து கொண்டார்.

இது இன்றைய முஸ்லிம் சமூகத்தில் உள்ள இளம் சமூகத்திற்கு தெரியுமா?

(ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க தரப்பில் மிலிந்த மொரகொட, ரவூப் ஹக்கீம், பேர்நாத் குணதிலக ஆகியோரும் விடுதலைப் புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம், தமிழ் செல்வன், விநாயகமூர்த்தி முரளிதரன், அடேல் பாலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.)

அந்த பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்காக ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எந்த கோரிக்கையையும் விடுக்காமல் அமைச்சர் என்ற அந்தஸ்துடன் அரசு தரப்பில் முஸ்லிம் பெயரில் இவர்மாத்திரமே கலந்து கொண்டார்.

12 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும் சக்தியாக அன்று இருந்த ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் தரப்பில் பிரதிநிதிகளை அனுப்பி முஸ்லிம்களின் பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது விட்டாலும் சர்வதேசத்திற்கு இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்திருக்க முடியும் அல்லவா?

ஆனால், அவர் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சிந்திக்காமலும் முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்தை புறக்கணித்தும் அமைச்சர் அந்தஸ்துடன் அரசு தரப்பாகவே சென்றார் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?