Sunday, July 5, 2020

நிந்தவூர் கடலில் கரை வலையில் சிக்கிய இராட்சத மீன்.


நிந்தவூர் கடலில்
கரை வலையில் சிக்கிய இராட்சத மீன்.

நிந்தவூர் நான்காம் பிரிவுக்குட்பட்ட பிரதேச கடலில் ( 06-07-2020 ) இன்று காலை கரைவலை சிக்கிய இராட்சத சுறா இன மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.  

இம்மீன் சுமார் 15அடி, நீளமும், 2 டன், இடையும் கொண்டதாகவும் உள்ளது என கரைவலை மீனவர்கள் கூறுகின்றனர்.

இம்மீன் "கொடுப்புளி சுறா" இன வகையைச் சேர்ந்த மீன் என்றும் கரை வலையை  இழுத்து கரைக்கு கிட்டத்தட்ட வரும் முன்பேதான் இம்மீனைக் மீனவர்கள் கண்டதாகவும் வலையில் சிக்கியதால் மீனவர்களால் இழுக்க முடியாமல் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு கட்டி இழுத்த போது கடல் தொழில் மீன்பிடி அதிகார சபை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அம்மீனை வலையில் இருந்து கழட்டி மீண்டு கடலில் விடுமாறு உத்தரவிட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முஹம்மட் ஜெலீல்,






No comments:

Post a Comment