அரசாங்க
வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்
குற்றச்சாட்டு
முற்றிலும் பொய்யானது
கல்வியமைச்சு
தெரிவிப்பு
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு
முற்றிலும் பொய்யானது தற்போது காணப்படும் சுற்று நிருபத்தின் அடிப்படையில் 43
பாடசாலைகளில் தரம் ஒன்றுக்காக 62 மாணவ மாணவியரையும் ஏனைய வகுப்புகளுக்காக 27 மாணவ, மாணவியரையும் சேர்க்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பங்களை நிராகரிக்கும் வைத்தியர்கள் 12
பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளை சேர்க்க வேண்டுமென கோரி வருகின்றனர்.என கல்வி
அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகால நிரந்தர வதிவிடம் இல்லாத காரணத்தினால் தமது
பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி மறுக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்
குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என கல்வி
அமைச்சு தெரிவித்துள்ளது.
இது விடயமாக கல்வி அமைச்சு மேலும் ஊடகங்களுக்கு கருத்து
வெளியிடுகையில், இலங்கையில் 352 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன.
இடமாற்றம் பெற்றுச் செல்லும் பெரும் எண்ணிக்கையிலான
வைத்தியர்கள் கொழும்பு றோயல், ஆனந்தா, நாலந்தா, விசாகா, கண்டி தர்மராஜ, கிங்ஸ்வுட், மஹாமயா, ஹை ஸ்கூல், குருணாகல் மலியதேவ ஆண்கள், பெண்கள் பாடசாலை உள்ளிட்ட நகரங்களின் முக்கிய 12 தேசிய பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளை
சேர்க்க வைத்தியர்கள் விரும்புகின்றார்கள்.
தற்போது காணப்படும் சுற்று நிருபத்தின் அடிப்படையில் 43 பாடசாலைகளில் தரம் ஒன்றுக்காக 62 மாணவ மாணவியரையும் ஏனைய வகுப்புகளுக்காக 27 மாணவ, மாணவியரையும் சேர்க்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பங்களை நிராகரிக்கும் வைத்தியர்கள் 12 பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளை சேர்க்க
வேண்டுமென கோரி வருகின்றனர்.
பிரபல பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக சிலர்
அருகாமையில் உள்ள நகரங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர்.
உதாரணமாக கம்பஹாவிலிருந்து பெம்முள்ளவிற்கு இடமாற்றம்
பெற்றுச் செல்லும் வைத்தியர்கள் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் பிள்ளையை
அனுமதிக்க வேண்டுமென கோருகின்றனர்.
வைத்தியர்களின் இந்தக் கோரிக்கை நியாயமற்றது, இதனால் சாதாரண பொதுமக்களுக்கு அநீதி ஏற்படும்
என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment